மாலை நேர வேளையில்
மனம் கவர்ந்த முல்லையே
சூடி கொள்ள அழைப்பேன் உன்னையே
உள்ளம் மகிழ தழுவிட விழைவாயோ! அங்கள்
அல்லல் துயர் கொணர்வாயோ!
ஏக்கம் எனை வாட்டுதே!
மோக தீயை மூட்டுதே!
இரு கன்னம் சிவக்க செவ்விதழ் திறப்பாயா ?
Wednesday, December 28, 2011
Friday, August 12, 2011
சுதந்திர தினம் !
மிட்டாய் கொடுத்த சுதந்திர தினம்
கடந்தாச்சு!
வாங்கி கொடுத்த தாத்தாவ
கொன்னாச்சு!
அவரு சிரிச்ச படம் ரூவா நோட்டுல
போட்டாச்சு!
கண்ணாடி உடையாம கொள்ளையும்
அடிச்சாச்சு!
அச்சச்சோ எனகன்ன ஆச்சு!
கடந்தாச்சு!
வாங்கி கொடுத்த தாத்தாவ
கொன்னாச்சு!
அவரு சிரிச்ச படம் ரூவா நோட்டுல
போட்டாச்சு!
கண்ணாடி உடையாம கொள்ளையும்
அடிச்சாச்சு!
அச்சச்சோ எனகன்ன ஆச்சு!
Friday, June 17, 2011
இதயம் இனித்திடும்
உனை பிரிந்து உனக்காக
வாழ்கிறேன்
காலம் நேரம் கூடிடவே
காத்துருக்கேன்
வசந்த காலம் வரும்போது மலர்
வண்டு போல் சேர்ந்துடுவேன்
உன்னை கண்டால் மட்டுமே
கண்கள் பனித்திடும் !
இதயம் இனித்திடும் !
வாழ்கிறேன்
காலம் நேரம் கூடிடவே
காத்துருக்கேன்
வசந்த காலம் வரும்போது மலர்
வண்டு போல் சேர்ந்துடுவேன்
உன்னை கண்டால் மட்டுமே
கண்கள் பனித்திடும் !
இதயம் இனித்திடும் !
Wednesday, March 2, 2011
நாளது மீளாது
கள்ளுரும் உன் நெஞ்சை களவாட வேணும்
உள்ளுர ஆசை உன்னோடு உறவாட வேணும்
சொல்லாத காதல் நெஞ்சோடு கிடக்கு
பொல்லாத பாசாங்கு ஏனடி உனக்கு
நோக்காது சென்றால் தாங்காது என் உள்ளம்
நினையாது போனால் மீளாது என் நெஞ்சு
வங்க கடல் வாலிபன்
வங்க கடல் வாலிபன் நான்
தங்க உடல் மேனகை நீ
காதல் வலை விரித் தேன்
என் நிலை உணர சிரி தேன்
கல் தேய ஊரும் கட்டரும்பு
புள் மேய போகும் காட்டருது
கல் போல் உன் மனம் கரையும்
புல் போல என் காதல் வளரும்
எகிப்து
பல்லாயிரம் வரலாறு கண்ட
நைல் எனும் ஜீவ நதி
சிங்க முக பிரமிடுகள்
அசர ஏற்பட்ட புரட்சி!
திறனற்ற அதிபரையே தூர
தேசம் ஓட செய்ய ஒன்று
கூடிய புரட்சி மக்கள்!
உலகம் வியக்க அறப்போர்
செய்து வெற்றி கண்ட
ஆப்ரிக்கா எகிப்து மக்கள்!
மக்களாட்சி மலர தேவை
ஒரு தேர்தல் வேணும்
மக்கள் உரிமை பெற!
வரிசை
எதுகை மோனை வைத்து
எழுத வேணும் கவிதை
ஒன்று
ஒப்பற்ற பொருளையும்
உணர்த்த வேணும் வரியில்
இரண்டு
அண்டம் பூர புகழும்
பிரம்ம அரி சிவன் மூர்த்தி
மூன்று
Wednesday, January 19, 2011
வெள்ளை விநாயகரே
வெள்ளை விநாயகரே எமது வீட்டின் முன்
இருக்கும் முதற் கடவுளே !
தங்க உடை உடுத்தியே அருள் பாளும்
ஈசனின் மைந்தனே !
அமைதியை விரும்பும் சக்தியின் மகனே !
உனை வணங்காது சென்றதில்லை !
அருள்வாய் என் அப்பனே !
அழைப்பது எப்போது
பால் வண்ண மேனிகொண்டு
குயில் போல கானத்திலே
நிலை மறந்து இமை மூடி ரசித்திட
பிறந்திட்ட பெண் மயிலே
மாலை சூடி மையல் கொள்ள
எனை அழைப்பது எப்போது ?
Friday, January 14, 2011
வந்தாள் தை
தை மாதம் பிறந்ததே!
கவலை எல்லாம் தொலையவே!
பொங்க வைப்போம் பானையில்!
நன்றி சொல்வோம் நல்வேளையில்!
கரும்பு தின்ன நேரமாச்சு!
கதை பேச நாமும் கூடியாச்சு!
கன்னி பொன்னுக பார்க்கையிலே!
துடிப்புடனே விளையாடிடுவோம் !
விடை கொடு ஆண்டே
தமிழ் ஆண்டின் கடைசி நாளே
விடை கொடு எனக்கு நல்
விடை கொடு !
தீமை தனை கொளுத்தி
நன்மை தனை எடுத்து போக
பழையன கழிதலும்
புதியன புகுதலுமான
வந்ததே போகியே !
Thursday, January 13, 2011
வரவேணும் தை பொங்கல்
உதிக்கும் சூரியனை உளமார வணங்கவே!
இனிக்கும் கரும்பினை கடித்து தின்னவே!
இஞ்சி மஞ்சள் கோர்த்து மாலை செய்யவே!
அதை பானை இரண்டு அணிந்து கொள்ளவே!
நம் குடும்பம் சூழ அரிசியிட்டு அடுப்பில்
வைத்த பானை பொங்கவே !
குதித்து குதித்து
'பொங்கலோ பொங்கல் '
என்று சொல்லியே !
ஒன்றிலே வெண்பொங்கல் மற்றதிலே
சர்க்கரை பொங்கல் தனை
இலையிலே இட்டு
சூரியனுக்கு படைக்கவே !
கண் மூடி நன்றி சொல்ல
வரவேணும் தை பொங்கல் நம்
தமிழ் பொங்கல் !
Wednesday, January 12, 2011
கண்டுனர்வேன் உனை
உடை நெகிழ கை காக்கும் அங்கன
துயர் அகல உதவும் நட்பே !
நகுதல் இன்றி இடித்துரைபதாம் நட்பே!
உனை கண்டுனர்வேன் ஊரார்
கதைக்கயிலே !
என் உள் நெஞ்சம்
மகிழயிலே !
தமிழ் வாழ்க
தமிழ் மொழி போலொரு மொழி உண்டோ !
தமிழ் தாய் வாழ்த்து போலொரு பாடல் உண்டோ !
தமிழ்நாடு போலொரு தேசம் உண்டோ!
வள்ளுவனை போலொரு ஞாநி உண்டோ!
கம்பனை போலொரு கவி உண்டோ!
ஈடில்லா உயிர்க்கு இணையில்லா
தமிழ் வாழ்க !
Tuesday, January 11, 2011
என் கவிதை
ஒய்வு நேரத்தில் ஒரு கவிதை!
ஓடோடி வா என் கவிதை!
வாசிக்க தோன்றும் கவிதை!
எல்லாரும் ரசிக்கும் கவிதை!
எழுதி முடித்தேன் ஓர் கவிதை!
இது என் கவிதை!
முத்தமிட்டு முத்தமிட்டு வாசிக்க
இது ஒரு நல்ல கவிதை!
Friday, January 7, 2011
நல் வாழ்வு
கற்றதோ ஓரிரண்டு !
கல்லாதார் பலரிருக்க
இவ்வுலகில் கீழார்
மேலார் இலர்
பொருளின் மேல் பற்றுடையோர்
கோடிபேர்
பெண்டிர் மேல் காமுடையோர்
பாதிபேர்
என்றிருக்க
நீயும்
அவ்வாறின்றி நல் வாழ்வு
வாழ்ந்திடடா !
அறிவியல்
அறிவியல் ஏற்றத்திலே !
அறியாதார் முற்றத்திலே !
தெரிந்து கொள் அதனை
புரிந்து கொள் !
நாளும் வளரும் அதனால்
நாமும் உயர்வோம் !
தொய்வின்றி படித்திடு !
புதுமை பல புகுத்திடு !
கடவாமல் கட
உமக்கு நல்லார் எல்லாம்
நல்லார் இலர்,
உமக்கு தீயர் எல்லாம்
தீயர் இலர்,
மதியின் துணையோடு
வாழ்வினை கடவாமல் கட !
மறந்துவிடு என்றதால்
உன்னால் எனக்கு நல்லபெயர்!
கைபேசி கட்டணம் குறைந்தது!
நல்லா உழைகிறேனாம் அலுவலகத்தில்!
இரவில் நல்ல உறக்கம்!
மனதிலே தெளிவு!
அம்மா அறிவார் ஏன் என்று!
இதுவெல்லாம் நீ மறந்துவிடு என்றதால்!
நெஞ்சம் வலிக்கிறது இதை சொல்லிக்கொள்ள நீ இல்லாதபோது!
Subscribe to:
Comments (Atom)