உதிக்கும் சூரியனை உளமார வணங்கவே!இனிக்கும் கரும்பினை கடித்து தின்னவே!
இஞ்சி மஞ்சள் கோர்த்து மாலை செய்யவே!
அதை பானை இரண்டு அணிந்து கொள்ளவே!
நம் குடும்பம் சூழ அரிசியிட்டு அடுப்பில்
வைத்த பானை பொங்கவே !
குதித்து குதித்து
'பொங்கலோ பொங்கல் '
என்று சொல்லியே !
ஒன்றிலே வெண்பொங்கல் மற்றதிலே
சர்க்கரை பொங்கல் தனை
இலையிலே இட்டு
சூரியனுக்கு படைக்கவே !
கண் மூடி நன்றி சொல்ல
வரவேணும் தை பொங்கல் நம்
தமிழ் பொங்கல் !