Friday, December 14, 2012

நாளை வரும் நீயும் வருவாயா!

நீ வருவாயா என
திரும்பி திரும்பி பார்கிறேன் !
நீ இல்லாத இந்நேரம்
பாடலிலே முழ்கி உன்னை
நினைத்து நேரம் கழிக்கிறேன்!

நாளை வருவாயா என
குழம்பி தவிக்கிறேன்!
நாளை வரும் நீயும் வருவாயா!

Saturday, September 22, 2012

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் பாட வேண்டும்
பாடல் கேட்டு ஆட வேண்டும்
ஊடல் கூடல் கொள்ள வேண்டும்
கொண்ட ஊடல் மறக்க வேண்டும்
சிரிக்க சிரிக்க பேச வேண்டும்
பேசி பேசி ரசிக்க வேண்டும்
நடக்கும் போது  இடிக்க வேண்டும்
இடித்த பின்னே கண்ணடிக்க  வேண்டும்!


ர ப ப பா ர ப ப பா !

Wednesday, February 29, 2012

நேர் கொள்

பிறை ஒளி வீச
மர நுனி ஆட
பனி துளி விழ
விழி வழி உனை காண
சிலை போல் நான் ஆக
சிறு இடை ஆட
எனை நேர் கொள்

Monday, February 20, 2012

காதல் கன்னி

அன்பே என் காதல் கன்னி
பூவானது உன் மேனி
உனை காணாது கலங்கி
மொழியாது பொருமி
அணையாது உருகி
நினைந்து தழுவி
இதயம் மருகி
சிறையானது எண்ணி
தனலானது நெஞ்சு

Wednesday, December 28, 2011

செவ்விதழ் திறப்பாயா ?

மாலை நேர வேளையில்
மனம் கவர்ந்த முல்லையே
சூடி கொள்ள அழைப்பேன் உன்னையே
உள்ளம் மகிழ தழுவிட விழைவாயோ! அங்கள்
அல்லல் துயர் கொணர்வாயோ!
ஏக்கம் எனை வாட்டுதே!
மோக தீயை மூட்டுதே!
இரு கன்னம் சிவக்க செவ்விதழ் திறப்பாயா ?

Friday, August 12, 2011

சுதந்திர தினம் !

மிட்டாய் கொடுத்த சுதந்திர தினம்
கடந்தாச்சு!
வாங்கி கொடுத்த தாத்தாவ
கொன்னாச்சு!
அவரு சிரிச்ச படம் ரூவா நோட்டுல
போட்டாச்சு!
கண்ணாடி உடையாம கொள்ளையும்
அடிச்சாச்சு!
அச்சச்சோ எனகன்ன ஆச்சு!

Friday, June 17, 2011

இதயம் இனித்திடும்

உனை பிரிந்து உனக்காக
வாழ்கிறேன்
காலம் நேரம் கூடிடவே
காத்துருக்கேன்
வசந்த காலம் வரும்போது மலர்
வண்டு போல் சேர்ந்துடுவேன்
உன்னை கண்டால் மட்டுமே
கண்கள் பனித்திடும் !
இதயம் இனித்திடும் !