Friday, December 14, 2012

நாளை வரும் நீயும் வருவாயா!

நீ வருவாயா என
திரும்பி திரும்பி பார்கிறேன் !
நீ இல்லாத இந்நேரம்
பாடலிலே முழ்கி உன்னை
நினைத்து நேரம் கழிக்கிறேன்!

நாளை வருவாயா என
குழம்பி தவிக்கிறேன்!
நாளை வரும் நீயும் வருவாயா!

Saturday, September 22, 2012

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் பாட வேண்டும்
பாடல் கேட்டு ஆட வேண்டும்
ஊடல் கூடல் கொள்ள வேண்டும்
கொண்ட ஊடல் மறக்க வேண்டும்
சிரிக்க சிரிக்க பேச வேண்டும்
பேசி பேசி ரசிக்க வேண்டும்
நடக்கும் போது  இடிக்க வேண்டும்
இடித்த பின்னே கண்ணடிக்க  வேண்டும்!


ர ப ப பா ர ப ப பா !

Wednesday, February 29, 2012

நேர் கொள்

பிறை ஒளி வீச
மர நுனி ஆட
பனி துளி விழ
விழி வழி உனை காண
சிலை போல் நான் ஆக
சிறு இடை ஆட
எனை நேர் கொள்

Monday, February 20, 2012

காதல் கன்னி

அன்பே என் காதல் கன்னி
பூவானது உன் மேனி
உனை காணாது கலங்கி
மொழியாது பொருமி
அணையாது உருகி
நினைந்து தழுவி
இதயம் மருகி
சிறையானது எண்ணி
தனலானது நெஞ்சு